ஒவ்வொரு நாளின் சூரிய
உதயமாய் வீட்டில்
முதலில் விழித்திடும்
அந்த விழிகளுக்கு சொந்தமானவள்...
விழித்த நொடி முதலே பணி
விடை செய்ய தொடங்கிடும்
வளைகரங்கள்...
சில அடிகளில் உள்ள
வீட்டிற்குள் பல மைல்கள்
தூரம் நடந்திருக்கும்
அவளின் ஓயாத கால்கள்...
தேனியும் சற்று வியந்துதான்
பார்க்கும் அவளின்
சுறுசுறுப்பை கண்டு.!
வெளிஉலகம் அறிந்திடாத
அவள் மனம் வீட்டின்
அத்தனை மனங்களையும்
அறிந்திருக்கும்!
தன்னலம் விரும்பாமல்
பாராட்டுக்காக காத்திடாமல்
தொண்டூழியம் செய்திடும்
அன்னை தெரசா அவள்!!
சூரியன் கூட தன் மாற்றாக
மாலையில் நிலவை
நிறுத்திச் செல்லும்
அவளுக்கு மாற்றில்லை
வாழ்நாள் முழுதும்!!
உணவை சமைத்து முழுதும்
பரிமாறுவதில் பசியாறிக்
கொள்ளும் அவள் குணம்!!
அன்பை பொழிவதிலும்
அரவணைத்து ஆறுதல்
சொல்வதிலும் சந்தோஷம்
கொள்ளும் அவள் ஆசைகள்!!
அதிகாலை தேநீரிலிருந்து
அந்தி இரவு வரை யாருக்கு
என்ன பிடிக்குமென்ற
பட்டியலை தேர்வுசெய்வதிடும்
அவளின்
கணிப்பொறி மூளை!!
எல்லார் மனத்திலும் நீக்கமற நிறைந்து
திரும்ப செலுத்த முடியாத
கடனை தந்துகொண்டே எல்லோர்
வாழ்வின் ஆதியும் அந்தமாகவும் வாழ்ந்து முடிக்கும்
உன்னதமான ஜீவன்
😊கடவுளுக்கும் மேலான அம்மா😊
உதயமாய் வீட்டில்
முதலில் விழித்திடும்
அந்த விழிகளுக்கு சொந்தமானவள்...
விழித்த நொடி முதலே பணி
விடை செய்ய தொடங்கிடும்
வளைகரங்கள்...
சில அடிகளில் உள்ள
வீட்டிற்குள் பல மைல்கள்
தூரம் நடந்திருக்கும்
அவளின் ஓயாத கால்கள்...
தேனியும் சற்று வியந்துதான்
பார்க்கும் அவளின்
சுறுசுறுப்பை கண்டு.!
வெளிஉலகம் அறிந்திடாத
அவள் மனம் வீட்டின்
அத்தனை மனங்களையும்
அறிந்திருக்கும்!
தன்னலம் விரும்பாமல்
பாராட்டுக்காக காத்திடாமல்
தொண்டூழியம் செய்திடும்
அன்னை தெரசா அவள்!!
சூரியன் கூட தன் மாற்றாக
மாலையில் நிலவை
நிறுத்திச் செல்லும்
அவளுக்கு மாற்றில்லை
வாழ்நாள் முழுதும்!!
உணவை சமைத்து முழுதும்
பரிமாறுவதில் பசியாறிக்
கொள்ளும் அவள் குணம்!!
அன்பை பொழிவதிலும்
அரவணைத்து ஆறுதல்
சொல்வதிலும் சந்தோஷம்
கொள்ளும் அவள் ஆசைகள்!!
அதிகாலை தேநீரிலிருந்து
அந்தி இரவு வரை யாருக்கு
என்ன பிடிக்குமென்ற
பட்டியலை தேர்வுசெய்வதிடும்
அவளின்
கணிப்பொறி மூளை!!
எல்லார் மனத்திலும் நீக்கமற நிறைந்து
திரும்ப செலுத்த முடியாத
கடனை தந்துகொண்டே எல்லோர்
வாழ்வின் ஆதியும் அந்தமாகவும் வாழ்ந்து முடிக்கும்
உன்னதமான ஜீவன்
😊கடவுளுக்கும் மேலான அம்மா😊